Vaa Vaa Thalaiva |
---|
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன் வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன் இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன் இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்
மீட்டாதிருந்த வீணை இது மீட்டாதிருந்த வீணை இது இன்று மீட்டுகிறேன் தெய்வ ஆணை இது
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்
வாழ வந்தேன் இந்த வாசலை தேடி மாலையுடன் திருமாங்கல்யம் சூடி நானிருந்தேன் நல்ல நாயகன் கூட நீ நினைத்தாய் ஒரு நாடகம் ஆட நினைத்தது போலே நடத்திய பாவி நீதான் நீதான் தெரிந்ததய்யா
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்
யாரறிவார் அன்று நான் பட்ட பாடு வேரினிலே சுடு நீர் விட்டபோது கூடு விட்டு அன்று போனது ஆவி போன பின்னால் இனி நானொரு தேவி இருட்டினில் வாழும் தருமங்கள் யாவும் வெளிச்சம் காணும் வேளையிது
மண்ணில் பிறந்து விண்ணில் பறந்து கண்ணில் படாமல் இருந்தேன் தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் விட்டும் விடாமல் தொடர்ந்தேன்
ஒவ்வொரு நாழியும் துடித்தேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன் ஒவ்வொரு நாழியும் துடித்தேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன்
பாண்டியன் சபையில் நீதியை கேட்ட பத்தினி தெய்வம் கண்ணகி நான் காலம் இதுதான் நேரம் இதுதான்
வா வா தலைவா நீ வா வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்