Vaarai Kanne Mazhai |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆஹ்ஹாஆ ஆஅஆஆ இருவர் : ஆஹாஹ் ஹா ஆஅஆஆ இருவர் : ஆஹாஹ் ஹா
வாராய் கண்ணே மழை முகில் நானே கண்ணே இளம் மயில் நீயே கண்ணே தென்றல் என்னும் தேர் ஏறி வா ஆஆதேர் ஏறி வா
வாராய் கண்ணா மழை முகில் நீயே கண்ணா இளம் மயில் நானே கண்ணா தென்றல் என்னும் தேர் ஏறி வா ஆஆஆதேர் ஏறி வா
{கார்மேக கூந்தல் காற்றோடு மோதி ஆனந்த தாலாட்ட கார்மேக கூந்தல் காற்றோடு மோதி ஆனந்த தாலாட்ட
கட்டான மேனி கொத்தோடு பூவும் கல்யாண ராகங்கள் பாட கட்டான மேனி கொத்தோடு பூவும் கல்யாண ராகங்கள் பாட
அங்கே நின்றால் நூறாயிரம் அருகே வந்தால் நூறாயிரம்
வாராய் கண்ணா மழை முகில் நீயே கண்ணா இளம் மயில் நானே கண்ணா இருவர் : தென்றல் என்னும் தேர் ஏறி வா ஆஆஆதேர் ஏறி வா
செந்தூர ரேகை சிங்கார தோகை என் மார்பில் ஆடாதா செந்தூர ரேகை சிங்கார தோகை என் மார்பில் ஆடாதா
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து சொல்கின்ற சங்கீதம் ஏதோ சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து சொல்கின்ற சங்கீதம் ஏதோ
சொர்க்கம் எங்கோ யார் கண்டது வெட்கம் இங்கே நான் கண்டது
வாராய் கண்ணே மழை முகில் நானே கண்ணே இளம் மயில் நீயே கண்ணே இருவர் : தென்றல் என்னும் தேர் ஏறி வா ஆஆஆதேர் ஏறி வா ஆஆஆதேர் ஏறி வா