Vaazhum Samuthayame |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே
அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது தப்பு என்ற போதும் அதை விட்டு வராது இருளே உடையானது
வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே
மணமகளோ உருவாகிறாள் மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள் மணமகளோ உருவாகிறாள் மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள்
கல்யாண கோஷம் சந்தோஷ வேஷம் கண்ணீரில் வாசம் பூமாலை வீசும் இருந்தும் தேசம் பஞ்சாங்கம் பேசும்
வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே
அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது தப்பு என்ற போதும் அதை விட்டு வராது இருளே உடையானது
வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே
ராமருக்கு தோளில்லையோ வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ ராமருக்கு தோளில்லையோ வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ
ஆளானதிங்கே தப்பாகி போச்சு சீதைகளுக்கெல்லாம் கூந்தல் நரைச்சாச்சு வீணை கூட விறகாகி போச்சு
வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே
தந்தை தந்த சிம்மாசனம் நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம் தந்தை தந்த சிம்மாசனம் நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம்
விழி மூடிக் கொண்டே விளையாட வந்தேன் உண்மைக்கு நானே திரைப் போட்டுக் கொண்டேன் உதடும் மனசும் பகையாகக் கண்டேன்
வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே
அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது தப்பு என்ற போதும் அதை விட்டு வராது இருளே உடையானது