Vadivelane Sivabalane

Vadivelane Sivabalane Song Lyrics In English


பாடகி : பி சுசீலா

பாடலாசிரியர் : வாலி

வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே

பழனியம் பதியினில் இருப்பவனே அடியவர் துயர்களை தடுப்பவனே

வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே

துயர் கதை என் வாழ்வில் தொடர்கதை என்றானால் கண்டும் காணாத கோலம் என்ன துயர் கதை என் வாழ்வில் தொடர்கதை என்றானால் கண்டும் காணாத கோலம் என்ன

அலைக் கடல் சிறு ஓடம் புயல் வசம் தடுமாற வந்து காவாத மாயம் என்ன


தேவனே அறியாயோ தாயின் உள்ளம் நீயும் ஒரு தாயின் பிள்ளைதான் தேவனே அறியாயோ தாயின் உள்ளம் நீயும் ஒரு தாயின் பிள்ளைதான் உன் மனம் நல்ல பொன்மனம் அல்ல கல் மனம் என்று அறிந்தேனே

வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே

ஒரு மலர் கனியாமல் கருகிட விடலாமோ அன்னை நான் செய்த பாவம் என்ன ஒரு மலர் கனியாமல் கருகிட விடலாமோ அன்னை நான் செய்த பாவம் என்ன அனுதினம் அலங்காரம் ஆரத்தி அபிஷேகம் யாவும் நான் செய்து லாபம் என்ன

வேலோடு மயில் மீது ஓடி வந்து பிள்ளை நோய் தீர்க்க வேண்டுமே வேலோடு மயில் மீது ஓடி வந்து பிள்ளை நோய் தீர்க்க வேண்டுமே ஷண்முகநாதா இன்னருள் நீ தா பன்னிரு கண்கள் மலராதா

வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே