Valarntha Kalai

Valarntha Kalai Song Lyrics In English


வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா

குடும்ப கலை
போதுமென்று கூறடா
கண்ணா அதில் கூட இந்த
கலைகள் வேறு ஏனடா
கண்ணா

வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா

காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா

கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா

காதலி தான்
மனைவி என்று கூறடா
கண்ணா அந்த காதலி
தான் மனைவி என்று
கூறடா கண்ணா அன்று
கண்ணை மூடி கொண்டிருந்தான்
ஏனடா கண்ணா

மனதில் அன்றே
எழுதி வைத்தேன் தெரியுமா
கண்ணா அதை மறுபடியும்
எழுத சொன்னால் முடியுமா
கண்ணா


தினம் தினம்
ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா

நினைப்பதெல்லாம்
வெளியில் சொல்ல முடியுமா
கண்ணா அதை நீ பிறந்த பின்பு
கூற இயலுமா கண்ணா

வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா

இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா

அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா நான் அடைக்கலமாய்
வந்தவள் தான் கூறடா கண்ணா