Valarpirai Enave En Vizhiyil |
---|
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே
ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது இருவரின் இடையே நெஞ்சோடு பூத்த நீலப் பூவே
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே
ஆண் : நீண்ட காலம் நீயும் நானும் நீங்கிடாமல் வாழலாம் காதல் வீணை கையில் ஏந்தி கானம் பாடலாம்
ஆண் : வா வா நான் தொடும் வாசனைத் தேனே வாழ்க்கை வாழ்வதற்கே நான்தான் என் மன வீட்டில் நாளும் ஏற்றும் பொன் விளக்கே என்னோடு சேர்ந்த ஜீவன் நீயே
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே
ஆண் : ஐயிரண்டு மாதமானால் தொட்டில் பாட்டு கேட்கலாம் கையிரெண்டில் பிள்ளை செல்வம் வந்து சேரலாம்
ஆண் : தாயே உன் மடி தாங்கிய சேய் தான் என் போல் ஆண் மகனா நாளும் சிந்தனை ஊஞ்சலில் ஆடும் உன் போல் பொன் மகளா அன்பே என் காதில் கூற வேண்டும்
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே
ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது இருவரின் இடையே நெஞ்சோடு பூத்த நீலப் பூவே
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே