Valarpirai Kanavugal

Valarpirai Kanavugal Song Lyrics In English


ஆண் : வளர்பிறை கனவுகள் இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம் பெண்ணே சாய்ந்தாடு

பெண் : காதல் நெஞ்சோடு கனவில் கண் மூடு ஒரு நாள் பொன்மாலை வருவேன் உன்னோடு ஆண் : திருமார்பில் கலந்தாடவோஓஓஓ

ஆண் : வளர்பிறை கனவுகள் இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

பெண் : பார்வை கோலத்தில் காதல் புள்ளிகள் சாயங்காலத்தில் ஆசை வண்ணங்கள் ஆண் : ஆஆஆதேர் வரும் வீதியிலே ஒரு மாதவி அரங்கேறும் பெண் : கோவலன் திரு மார்பில் பூமாலைகள் வரவேற்கும்

ஆண் : தேவதை சிறகுகள் ஆவலில் விரிப்பது வானில் தாவத்தான் பெண் : திருமகள் சிரிப்பதும் தேன் மலர் விரிப்பதும் பாடல் பாடத்தான்

ஆண் : பூமாறன் வில்லேந்தி வரும் மாலையே பெண் : ரதிதேவி கொலுவேற்க்கும் ராஜாங்கமே ஆண் : பூந்தென்றல் தாலாட்டுதோஓஓஒ


பெண் : வளர்பிறை கனவுகள் இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம் பெண்ணே சாய்ந்தாடு

பெண் : வாழ்வின் சோகங்கள் கண்ணீர் சொந்தங்கள் மாறும் நோக்கத்தில் கோயில் தீபங்கள் ஆண் : தேடிய சிப்பிகளில் நீ வலம்புரி சங்கானாய் காலடி பட்டதனால் உப்புக் கடல் நீர் இனிக்குதடி

பெண் : சந்தன மேனி கலசம் தான் இதை தாங்கி கொள்ளவோ ஆண் : தாவணி சுற்றிய நூலிடை துவளது ஏந்திக் கொள்ளவா பெண் : பூ மெத்தை மடி மீது நதியோரந்தான் ஆண் : சாமந்தி சுக வாசம் க்ஷண நேரந்தான் தேனூற்று சுரக்கின்றதோஓஓஒ

ஆண் : வளர்பிறை கனவுகள் இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு பெண் : விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம் பெண்ணே சாய்ந்தாடு