Vanam Pesuma (Pathos) |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓஒகண்களே
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓஒநெஞ்சமே
நீயாஆ நீயா அந்த ராகம் ஏனோ இன்று சோகம் நானாஆ நானாய் நானும் இல்லை தீயில் வாடும் முல்லை
முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள்
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓஒநெஞ்சமே
யாரோஓ யாரோ செய்த பாவம் யாரை சொல்லி லாபம் ஏனோஓ ஏனோ இந்த வஞ்சம் காயம் ஆன நெஞ்சம்
நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும் கண்டேன் உந்தன் சோகம் கண்ணீர் சிந்தும் வானம்
வானம் பேசுமே அது சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓஒநெஞ்சமே