Vanthaara Vazha Vaikkum

Vanthaara Vazha Vaikkum Song Lyrics In English


வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
எந்நாடானாலும் எம்மதமானாலும்
அட ஏசு புத்தர் காந்தி
அவங்க மனச போல வாழ வைக்கும்

வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு

கங்கையும் காவிரி பாயிற நாடு
இந்த நன் நாட்டுக்கு ஈடிணை ஏது
தங்கமும் தான் உண்டு பூமியில் தேடு
சுந்தரத் தேன் தமிழ் பாட்டினில் பாடு
இங்குள்ள செல்வம் தன்னை
யார் எடுத்துப் போனாலும்
அன்பென்னும் செல்வம் தன்னை
கொள்ளை கொள்ள ஆகுமோ
ஏழையின் நாடு என்று ஏளனங்கள் சொன்னாலும்
எப்போதும் அறிவில் இங்கு
யாரும் ஏழை இல்லையே
உன் பேச்சுக்கள் ஏச்சுக்கள் காற்றினில் போச்சு

வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
எந்நாடானாலும் எம்மதமானாலும்
அட ஏசு புத்தர் காந்தி
அவங்க மனச போல வாழ வைக்கும்

வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு




கூழுக்கும் கஞ்சிக்கும் பாடு பட்டாலும்
சோறுண்டு வீட்டுக்கு தேடி வந்தோர்க்கு
தண்ணிக்கு க்யூவினில் நாளும் நின்றாலும்
காப்பியும் டீ உண்டு நாடி வந்தோர்க்கு
எத்தனை கட்சிகளும் ஆரம்பித்துக் கொள்ளையா
பூமிக்குள் கம்பை நட்டு கொடிய ஏத்திக் கொள்ளையா
நாட்டுக்குத் தலைவன் போல பேச்சுக் கூட பேசையா
ஓட்டுக்கு வந்து காசை வீசிக் கூடப் பாரையா
தேர்தலின் நேரத்தில் யோசிக்க மாட்டோம்

வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
எந்நாடானாலும் எம்மதமானாலும்
அட ஏசு புத்தர் காந்தி
அவங்க மனச போல வாழ வைக்கும்

வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
தந்தானன் நான்னான்ன நானா ஏஹே
தந்தானன் நான்னான்ன நானா