Varungal Aasaigale Vasalil |
---|
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட பாடுங்கள் தேவர்களே பாவலன் பாட்டுரைக்க பாடுங்கள் தேவர்களே பாவலன் பாட்டுரைக்க வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
யார் தன்னைக் கண்டது நான் என்னைக் கண்டவன் ஏன் இன்னும் வாழ்வது தெய்வம் என்னைக் காணட்டும்
யார் தன்னைக் கண்டது நான் என்னைக் கண்டவன் ஏன் இன்னும் வாழ்வது தெய்வம் என்னைக் காணட்டும்
வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
சிலையொன்று பூமாலை கேட்கின்றது இசையொன்று புகழ் மாலை கேட்கின்றது என் பாடல் சிலர் காதில் விழவில்லையே அவனின்றி இனியாரும் துணையில்லையே
கண்ணாடி கல் கூட விலை போவதும் தண்ணீரால் வைரங்கள் நனைகின்றதும் கண்ணா கண்ணா உன் விளையாட்டு தெரிகின்றது என் பாட்டு உனக்காக எழுகின்றது
வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
தாயாரின் தாலாட்டில் கருவானவள் தணியாத தமிழ்ப்பாட்டில் உருவானவன் ஓயாமல் புகழ் தேடி நடை போட்டவன் உதவாத மனிதர் முன் கடை போட்டவன்
அங்கேனும் சபை கூட்டி வையுங்கள் அழகாகத் தலையாட்டி ரசியுங்களேன் சங்கீதச் சுவை கேட்டு வாழ்த்துங்களேன் சரியான அடையாளம் காட்டுங்களேன் சங்கீதச் சுவை கேட்டு வாழ்த்துங்களேன் சரியான அடையாளம் காட்டுங்களேன்
வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட