Vennila Ethuvum |
---|
வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்
மன்னவா நானும் பேசாமல் நிழலாய் வந்து போவேனே உன்னுடன் நான் வர வார்த்தை தேவையா
வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
எனது நேற்றும் உனது நேற்றும் ஓடும் ரயில் போல ஓடட்டுமே உனது நாளை எனது தோளில் ஊஞ்சல் கட்டித்தான் ஆடட்டுமே
அன்பே உந்தன் காதலின் வேர்வை நெஞ்சம் எங்கும் ஊர்கிறதே தாராததும் பெறாததும் கனாவிலே தினம் வரும்
வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
எனக்கு பேச ஆசையும் வந்தால் உந்தன் குரலைத்தான் கடன் வாங்குவேன் எனது என்று எதுவுமில்லை உன் நெஞ்சின் ஓரத்தில் இடம் வாங்குவேன்
கண்ணின் ஓரம் ஓர் துளி நீரும் காதல் நெஞ்சை சொல்லி விடும் உன்னோடு நான் கை கோர்த்ததும் உள்ளே ஒரு ரசாயனம்
வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்
மௌனமே நீயும் பேசாமல் மின்னலாய் வந்து போனாயே என்னுடன் நீ வர வார்த்தை தேவையா
வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்