Vennila Ethuvum

Vennila Ethuvum Song Lyrics In English


வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்

மன்னவா நானும் பேசாமல் நிழலாய் வந்து போவேனே உன்னுடன் நான் வர வார்த்தை தேவையா

வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்

எனது நேற்றும் உனது நேற்றும் ஓடும் ரயில் போல ஓடட்டுமே உனது நாளை எனது தோளில் ஊஞ்சல் கட்டித்தான் ஆடட்டுமே

அன்பே உந்தன் காதலின் வேர்வை நெஞ்சம் எங்கும் ஊர்கிறதே தாராததும் பெறாததும் கனாவிலே தினம் வரும்

வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்


எனக்கு பேச ஆசையும் வந்தால் உந்தன் குரலைத்தான் கடன் வாங்குவேன் எனது என்று எதுவுமில்லை உன் நெஞ்சின் ஓரத்தில் இடம் வாங்குவேன்

கண்ணின் ஓரம் ஓர் துளி நீரும் காதல் நெஞ்சை சொல்லி விடும் உன்னோடு நான் கை கோர்த்ததும் உள்ளே ஒரு ரசாயனம்

வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்

மௌனமே நீயும் பேசாமல் மின்னலாய் வந்து போனாயே என்னுடன் நீ வர வார்த்தை தேவையா

வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்