Vennilavin Theril |
|---|
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமை போல
தானம் கேட்க கூசி நின்றேனே
நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே
நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
நிறம் கண்டு முகம் கண்ட
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே
நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
கால் அழகு மேல் அழகு
கண் பொங்க கண்டேன்
அவள் நூல் அவிழும் இடை அழகை
நோகாமல் தின்பேன்
கத்தி மூக்கில்
காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே
அட கைநீட்டும் தம்பியே
எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது
