Vidhi Ezhudhiya Paattu |
---|
நீயும் நானும் பிரிகிறோம் என்றால்
போதுமே போதுமே
நேரம் காலம் இவைகள் தானென்றால்
போதுமே போதுமே
அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ
முடியுமா முடியுமா
அன்பே உந்தன் நினைவுதான் என்னைப்
பிரியுமா பிரியுமா பிரியுமா
விதி எழுதிய பாட்டு அது ஒரு விளையாட்டு மதி கலங்குது கேட்டு மயக்கத்தை கலந்தூட்டு
கணக்கு வைத்து கதைக்குள் என்னை இணைத்த தென்ன? எனக்குள் மட்டும் குழப்பம் வைத்து படைத்த தென்ன?
பிறந்த வேளை எதற்கு என்று உணர்ந்து கொள்ள அறிந்துகொள்ள தெரிந்த புத்தி ஏன் இல்லை ஓ
விதி எழுதிய பாட்டு அது ஒரு விளையாட்டு மதி கலங்குது கேட்டு மயக்கத்தை கலந்தூட்டு
மற்றவர்க்கு அன்பு செய்ய தொண்டு செய்ய வேண்டீ வேண்டீ வேண்டீ வேண்டீ
கேட்டு வந்த நான் தான் இன்றிங்கு வேறுபட்டு கூறுகெட்டு மாறுபட்டு என் பாதை மூடிவிட்ட தேனோ?
இதென்ன யாருரைத்த சாபமென்று கோபமென்று கண்டு கொள்ள பார்த்து சொல்ல ஆள் ஏது?
இன்றிங்கு வாழுகின்ற வாழ்க்கை இது வாழ்க்கை இல்ல இது மறுகின்ற தென்றோ
நீயும் நானும் பிரிகிறோம் என்றால் போதுமே போதுமே
நேரம் காலம் இவைகள் தான் என்றால் போதுமே போதுமே
அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ முடியுமா முடியுமா
அன்பே உந்தன் நினைவுதான் என்னைப் பிரியுமா பிரியுமா