Vinnile Minmini Oorvalam

Vinnile Minmini Oorvalam Song Lyrics In English


பாடலாசிரியர்  : மணிமுடி

ஆஆஅஆஆ ஓஓஓஓஓஓஓ ஓஒஓஓஓஓ

விண்ணிலே மின்மினி ஊர்வலம் மண்ணிலே மல்லிகை பூச்சரம் வெண்ணிலா மேடையில் மோகனம் இங்கு காண்பது இந்திர சபையோ இந்த நாள் காணவே வந்ததோ வானமே ஓஓஓஓஓஓ

விண்ணிலும் பாதைகள் போடுவோம் கைகளை நம்பியே வாழுவோம் மண்ணிலே சொர்க்கமே காணுவோம் இந்த பூமியில் காவியம் படைப்போம் நம்மையே நம்பியே உள்ளது தேசமே ஓஓஓஓஓஓ

விண்ணிலே மின்மினி ஊர்வலம் மண்ணிலே மல்லிகை பூச்சரம் வெண்ணிலா மேடையில் மோகனம்

மனதினில் நிழலாடும் கனவுகள் ஒரு கோடி தனிமையில் அதைக் கூற தவிக்குது மனம் வாடி எண்ணத்தை மறைக்காமல் சொல்வதில் தவறேது என்னிடம் அதை சொன்னால் நெஞ்சினில் சுமையேது

எத்தனை நாளாக மறைப்பது நெஞ்சோடு பெண் மனம் கடல் ஆழம் சொல்லாமல் புரியாது எப்படி அதை சொல்ல வெட்கமும் தடை போட கற்றவள் நீயன்றோ வெட்கமும் வரலாமோ உயிரின் உயிராய் இணையும் நினைவால் உருகிடும் மலருக்கு இளந்தென்றல் துணை வேண்டும்


விண்ணிலே மின்மினி ஊர்வலம் மண்ணிலே மல்லிகை பூச்சரம் வெண்ணிலா மேடையில் மோகனம் இன்று காண்பது இந்திர சபையோ இந்த நாள் காணவே வந்ததோ வானமே ஓஓஓஓஓஓ

உறவான மலரொன்று சிறை கொண்ட பின்னாலே இனி வேறு மலர் தேடி இளந்தென்றல் போகாது

கண்ணனுக்கு ராதை என்று சொந்தமங்கு ஆன பின்னே இன்னொருத்தி கண்ணனைத்தான் எண்ணுவதில் லாபமில்லை

நெஞ்சத்தை ஒரு நாளும் கண் பார்க்க முடியாது நினைவுக்கு நாம் தேடும் உருவங்கள் கிடையாது நீரினில் நிழல் பூக்கள் பறிப்பவர் யாரிங்கே யாருக்கு யார் அன்றே எழுதிவிட்டான் அங்கே இரவும் வானும் நிலவும் ஒன்றே இன்னொரு நிலவுக்கு இடமங்கு கிடையாதே

கண்ணாம்ம்ம்கண்ணாம்ம்ம்ம் கண்ணாம்ம்ம்ம் பெண் வீணை தினம் பாடும் ராகங்கள் மாறியதோ வெண் முல்லை கொடி மேலே அனல் காற்று வீசியதோ ஆசையின் அலை மேலே நான் கண்ட ஒடமொன்று நான் ஏறும் முன்னாலே நீரோடு போனதென்ன

ஓவ்வொரு இரவும் மெல்ல வந்தது கனவுகள் உன்னுடன் மணம் புரிந்து கொண்டது நினைவுகள் நெஞ்சமும் உனை நினைத்து அன்பினில் மலர்ந்திருக்கும் கொஞ்சிடும் சலங்கை ஒலி அன்னையின் புகழ் படிக்கும் இனி என் மனது அமைதி பெறவே கலைமகள் திருவடி நிழலினில் வாழ்வேனே