Vizhigalil Oru Kaviyam |
---|
விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்
ராத்திரியே சூரியனாய் தாக்கிடுதே நெஞ்சில் வேர்த்திடுதே நீ அணைக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் இல்லை வான் பறப்பேன்
விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்
தனிமையில் மனம் வாடிடுதே துணைக் குயில் உனைத் தேடிடுதே இரவுகள் மனம் ஈரமில்லை இளமையும் சுமை ஆகிடுதே
அன்பு தந்த கண்ணனே உள்ளம் ஒன்று வேண்டுதே இன்பம் துன்பம் யாவிலும் பங்கு பாதி கேட்குதே எல்லாம் இங்கே உன்னைப் போல தோன்றிடுதே
விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்