Vizhiyil Vazhiyum Thuli

Vizhiyil Vazhiyum Thuli Song Lyrics In English


விழியில் வழியும் துளி நீர் சொல்லும் கதையல்லவோ பெண்ணின் மனதின் சுமை ஒரு கோடி துயர் அல்லவோ சுமை ஒரு கோடி துயரல்லவோ

தெய்வத்தின் கோயில் பூஜைக்குத்தானே பூத்ததிந்த ரோஜாப்பூ தெருவினில் விழுந்து புழுதியில் கலந்து போனது யார் செய்த பொல்லாப்பு

தெய்வத்தின் கோயில் பூஜைக்குத்தானே பூத்ததிந்த ரோஜாப்பூ தெருவினில் விழுந்து புழுதியில் கலந்து போனது யார் செய்த பொல்லாப்பு

பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே வாழ்க்கை கனவானதே பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே வாழ்க்கை கனவானதே

நெஞ்சின் சுமையை அவள் யாரிடம் சொல்லி அழுவாள் அவள் யாரிடம் சொல்லி அழுவாள்

விழியில் வழியும் துளி நீர் சொல்லும் கதையல்லவோ பெண்ணின் மனதின் சுமை ஒரு கோடி துயர் அல்லவோ சுமை ஒரு கோடி துயரல்லவோ


புள்ளி மானாய் பொன் இளம் கன்றாய் துள்ளி வந்தாளம்மாஆஆஆ இன்று புலியிடம் தன்னை பலியென தந்து உறவினைக் கண்டாளம்மா

புள்ளி மானாய் பொன் இளம் கன்றாய் துள்ளி வந்தாளம்மாஆஆஆ இன்று புலியிடம் தன்னை பலியென தந்து உறவினைக் கண்டாளம்மா

நினைவில் வந்த நிம்மதி எங்கே தேடிச் சென்றாளம்மா நினைவில் வந்த நிம்மதி எங்கே தேடிச் சென்றாளம்மா

உயிரில் கலந்த அவள் தெய்வத்தை காண்பாளோ காதல் தெய்வத்தை காண்பாளோ

விழியில் வழியும் துளி நீர் சொல்லும் கதையல்லவோ பெண்ணின் மனதின் சுமை ஒரு கோடி துயர் அல்லவோ சுமை ஒரு கோடி துயரல்லவோ