Vizhiyil Vazhiyum Thuli |
---|
விழியில் வழியும் துளி நீர் சொல்லும் கதையல்லவோ பெண்ணின் மனதின் சுமை ஒரு கோடி துயர் அல்லவோ சுமை ஒரு கோடி துயரல்லவோ
தெய்வத்தின் கோயில் பூஜைக்குத்தானே பூத்ததிந்த ரோஜாப்பூ தெருவினில் விழுந்து புழுதியில் கலந்து போனது யார் செய்த பொல்லாப்பு
தெய்வத்தின் கோயில் பூஜைக்குத்தானே பூத்ததிந்த ரோஜாப்பூ தெருவினில் விழுந்து புழுதியில் கலந்து போனது யார் செய்த பொல்லாப்பு
பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே வாழ்க்கை கனவானதே பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே வாழ்க்கை கனவானதே
நெஞ்சின் சுமையை அவள் யாரிடம் சொல்லி அழுவாள் அவள் யாரிடம் சொல்லி அழுவாள்
விழியில் வழியும் துளி நீர் சொல்லும் கதையல்லவோ பெண்ணின் மனதின் சுமை ஒரு கோடி துயர் அல்லவோ சுமை ஒரு கோடி துயரல்லவோ
புள்ளி மானாய் பொன் இளம் கன்றாய் துள்ளி வந்தாளம்மாஆஆஆ இன்று புலியிடம் தன்னை பலியென தந்து உறவினைக் கண்டாளம்மா
புள்ளி மானாய் பொன் இளம் கன்றாய் துள்ளி வந்தாளம்மாஆஆஆ இன்று புலியிடம் தன்னை பலியென தந்து உறவினைக் கண்டாளம்மா
நினைவில் வந்த நிம்மதி எங்கே தேடிச் சென்றாளம்மா நினைவில் வந்த நிம்மதி எங்கே தேடிச் சென்றாளம்மா
உயிரில் கலந்த அவள் தெய்வத்தை காண்பாளோ காதல் தெய்வத்தை காண்பாளோ
விழியில் வழியும் துளி நீர் சொல்லும் கதையல்லவோ பெண்ணின் மனதின் சுமை ஒரு கோடி துயர் அல்லவோ சுமை ஒரு கோடி துயரல்லவோ