Yaar Veettu Roja

Yaar Veettu Roja Song Lyrics In English


யார் வீட்டு ரோஜா இந்த ராஜா கையில் நானே ஏந்தும் புது ரோஜா யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை சொந்தம் எதுவென சொல்வாயடா

புதிரேவா காலைக் கதிரேவா தெய்வம் தந்த சொந்தம் பந்தம் நீயோ குறுநகை புரிந்திடும் இளம் பிறையோ

யார் வீட்டு ரோஜா இந்த ராஜா

யாரோ ஒரு தாய் மடியில் பூத்த வந்த முல்லை பாவம் அதை வாய்மொழிய அறிந்திடாத பிள்ளை யார் மனம் யார் வசம் யார் சொல்லக் கூடும் உண்மையும் ஊமையாய் ஆனது ஏனோ

உச்சி மலையில் தண்ணீர் வெள்ளம் பிறக்கும் வங்கக் கடலில் தானே வந்து கலக்கும் அதில் நான் மகிழ்ந்திட தானே இன்று இன்னொரு சங்கமம் ஆச்சு

கையில் நீ தவழ்ந்திடத்தானே எந்தன் துன்பமும் துக்கமும் போச்சு நந்தவனத்தினில் வந்து சிரிக்கிற பூவே மகிழம் பூவே உன்னை அணைத்திட அள்ளி எடுத்திட நான் மயங்க

யார் வீட்டு ரோஜா இந்த ராஜா கையில் நானே ஏந்தும் புது ரோஜா யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை சொந்தம் எதுவென சொல்வாயடா


தென்றல் இரு கால் முளைத்து தவழ்ந்து வந்ததென்ன மின்னல் இரு கண் மலர்ந்து மழலை சொல்வதென்ன இன்பமே உன்னை நான் தொட்டிலில் போட்டு ஆரிரோ என்று நான் பாடணும் பாட்டு

சங்கை எடுத்து பாலை ஊட்டி விடுவேன் தங்க சதங்கை காலில் மாட்டிவிடுவேன் ஒரு மாமரக் குயில் போலே இந்த மன்றத்தில் நீ வந்து கூவ

இளந்தாமரைக் கொடி போலே எந்தன் தோள்களில் நீ வந்து தாவ அள்ளி இறைத்திடும் கள்ளச் சிரிப்பொரு வீணை பேசும் வீணை கன்னம் சிவந்திட முத்தம் பதிக்கையில் நான் உருக

யார் வீட்டு ரோஜா இந்த ராஜா கையில் நானே ஏந்தும் புது ரோஜா யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை சொந்தம் எதுவென சொல்வாயடா

புதிரேவா காலைக் கதிரேவா தெய்வம் தந்த சொந்தம் பந்தம் நீயோ குறுநகை புரிந்திடும் இளம் பிறையோ

யார் வீட்டு ரோஜா இந்த ராஜா