Yaaro Sonnangalam

Yaaro Sonnangalam Song Lyrics In English


யாரோ சொன்னாங்களாம் அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள் விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ அட ராமா ஹா ஹாஹா

யாரோ சொன்னாங்களாம் அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள்

மெத்தையில் மாமனத்தான் சேர்த்து மல்லியப் பூ ஒடம்பு வேர்த்து நித்தமும் ராத்திரிதான் கூத்து எத்தன பாத்திருக்கேன்

நித்தமும் போய் இருப்பான் பட்டப் பகலில் தத்துவங்கள் படிப்பான் சித்திரம் போல் சிரிப்பேன் என்ன புரட்ட புத்தகம் போல் எடுப்பான்

ஆசை கொள்ளாத நெஞ்சம் இங்கேது மோகம் கொள்ளாத கண்கள் இங்கேது மூளை இல்லாமல் வேலை இல்லாமல்

யாரோ சொன்னாங்களாம் அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள் விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ அட ராமா ஹா ஹாஹா

யாரோ சொன்னாங்களாம் அந்த ஆசை அறுபது நாள்


மந்திரப் பாட்டிருக்கும் ஏடு முக்கனித் தேன் இருக்கும் கூடு மன்மதன் வாழ்ந்திருக்கும் வீடு முன் வழி பாத்திருக்கும்

சொன்னதெல்லாம் நடக்கும் எண்ணப்படிதான் கேட்டதெல்லாம் கெடைக்கும் பஞ்சணை மேல் கிடக்கும் அன்னக்கொடிதான் தாகமெல்லாம் தணிக்கும்

சொர்க்கம் இப்போது பக்கம் வந்தாட வெட்கம் இப்போது என்னை விட்டோட போதை கொள்ளாமல் பேதை இல்லாமல்

யாரோ சொன்னாங்களாம் அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள் விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ ஹ விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ அட ராமா ஹா ஹாஹா

யாரோ சொன்னாங்களாம் அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள்