Yaezhai Veettil Pootha (Male) |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுதும் நாளை பொழுது மாறுமே
ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே
ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது
பூவொன்று வாசம் மறந்து வேரைத் தான் தாங்குது தூங்கம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது
ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே
பெண்ணுக்குள் வீரம் உண்டு கண்ணுக்குள்ளே பாசம் உண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானம் உண்டு
பெண்ணுக்குள் வீரம் உண்டு கண்ணுக்குள்ளே பாசம் உண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானம் உண்டு
மானம்தான் நீதி என்ற மனதுக்குள் தீயும் உண்டு போராட்டம் தாங்கும் நெஞ்சின் பொறுமைக்கு வாழ்வு உண்டு நீ கூட மகராணி தாயின் கனவு தானம்மா
ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுவதும் நாளை பொழுது மாறுமே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்