Yelai Imayamalai |
|---|
ஏலே இமய மலை
எங்க ஊரு சாமி மலை
எட்டு திசை நடுங்க எட்டு
வச்சு வாராரு திரிசூல மீச
வெச்சு தீ பொரிய பொட்டு
வெச்சு கரிகாலன் சோழன்
போல கால் நடந்து வாராரு
மனு நீதி மன்னனுக்கே
மறு பொறப்பா வாராரு தர்மன்
ராசாவுக்கே தருமம் சொல்லி
தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி
கட்டபொம்மன் வாராரு நாடாரம்
கொண்ட எங்க ராச ராசன்
வாராரு
ஏலே இமய மலை
எங்க ஊரு சாமி மலை எட்டு
திசை நடுங்க எட்டு வச்சு
வாராரு திரிசூல மீச வெச்சு
தீ பொரிய பொட்டு வெச்சு
கரிகாலன் சோழன் போல
கால் நடந்து வாராரு
தஞ்சாவூர் கோபுரம்
தான் தலப்பாவ கட்டி
போட்டு நட நடந்து வர்ரத
போல் நம்ம அய்யா
வாராரு
கர்ணன்
கொடுத்ததென்ன
சிரத்தால் உயர்த்ததென்ன
அய்யா உசுருவர அள்ளி
அள்ளி தருவாரு
சாதி சாதிக்கொரு
சங்கம் வெச்சா நாட்டுக்குள்ள
எல்லா சாதிக்கொரு கோயில்
போல வாராரு
இல்ல என்பதையே
இல்லாம செஞ்சவரு
தென்பாண்டி தேரழகா
தெருமேல வாராரு
ஹே ஈட்டி எதிர
வந்தா கண்ண இமைச்சது
இல்ல தமிழன் பரம்பரைக்கே
தன்மானமா வாராரு
தங்க தமிழ் நாட்டு
சிங்க தமிழன் வாராரு
கருப்பு சூரியனா
கம்பீரமா வாராரு
ஏழை ஜனங்களுக்கு
பங்காளியா வாராரு வாரி
கொடுப்பதிலே வரலாறா
வாராரு
அய்யா ஊர்வலத்தில்
ஆரத்தி எடுக்கத்தான் ஆகாச
சூரியனே ஆச படும் நீ பாரு
சொன்ன சொன்ன
சொல்லில் சத்தியமா
நிப்பாரு நின்ன நின்ன
இடம் நிச்சயமா
ஜெயிப்பாரு
ஏ சேது சமுத்திரமே
எங்க வீதியில கை வீசி
வாரதபோல் தவசி
அய்யா வாராரு
ஏலே இமய மலை
எங்க ஊரு சாமி மலை
எட்டு திசை நடுங்க எட்டு
வச்சு வாராரு திரிசூல மீச
வெச்சு தீ பொரிய பொட்டு
வெச்சு கரிகாலன் சோழன்
போல கால் நடந்து வாராரு
மனு நீதி மன்னனுக்கே
மறு பொறப்பா வாராரு தர்மன்
ராசாவுக்கே தருமம் சொல்லி
தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி
கட்டபொம்மன் வாராரு நாடாரம்
கொண்ட எங்க ராச ராசன்
வாராரு
