Yendiyamma Kobamenna |
---|
பாடலாசிரியர் : வாலி
ஏன்டியம்மா கோபமென்ன நான் புரிஞ்ச பாவமென்ன உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு என்னோட சொல் உனக்கு என்னாச்சு
ஏன்டியம்மா கோபமென்ன நான் புரிஞ்ச பாவமென்ன உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு என்னோட சொல் உனக்கு என்னாச்சு
நிலவு கூட அழுக்குத்தான் உலகறிஞ்ச வழக்குத்தான் நானும் கூட தவறு செஞ்ச மனுஷன்தான் அதுக்கா இந்த வெறுப்பு அடி நானா சொல்லு பொறுப்பு உன்ன உசுரா இங்கு நெனப்பேன் ஒரு நிழலா வந்து அணைப்பேன்
ஏன்டியம்மா கோபமென்ன நான் புரிஞ்ச பாவமென்ன உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு என்னோட சொல் உனக்கு என்னாச்சு
திருந்தி வாழ நெனைக்கிறேன் திரும்பி வந்து அழைக்கிறேன் போனதெல்லாம் போகட்டும் வா துடிக்கிறேன் தெரிஞ்சா என்ன வெறுப்பே இது புரிஞ்சா வர மறுப்பே நான் கொடுத்தேன் நல்ல விளக்கம் இளம் கிளியே என்ன மயக்கம்
ஏன்டியம்மா கோபமென்ன நான் புரிஞ்ச பாவமென்ன உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு என்னோட சொல் உனக்கு என்னாச்சு