Yetramadi Yetram |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம் ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம் ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம் ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்
தந்தானே தானே தந்தானே தந்தானே தானே தந்தானே
ஏற்றத்துக்கு மாடு ரெண்டு இணைஞ்சு போகணும் அந்த இலக்கணத்தை நாமும் கூட தெரிஞ்சு வாழணும் ஏற்றத்துக்கு மாடு ரெண்டு இணைஞ்சு போகணும் அந்த இலக்கணத்தை நாமும் கூட தெரிஞ்சு வாழணும்
அழகு வெள்ளம் வயலில் பாயும் ஏற்றத்தினாலே அழகு வெள்ளம் வயலில் பாயும் ஏற்றத்தினாலே அந்த வெள்ளம் வாழ்வில் பாயும் காதலினாலே
ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம் ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்
தந்தானே தானே தானே தந்தானே தந்தானே தானே தானே தந்தானே
விட்டெறிஞ்ச பொன்னரிவாள் வானத்திலே சிறு வெண் பிறையாய் ஊர்ந்து வரும் நேரத்திலே விட்டெறிஞ்ச பொன்னரிவாள் வானத்திலே சிறு வெண் பிறையாய் ஊர்ந்து வரும் நேரத்திலே
நீ கிட்ட வந்து பாட வேணும் தமிழ்ப்பாட்டு நீ கிட்ட வந்து பாட வேணும் தமிழ்ப்பாட்டு நான் தேனும் பாலும் குடிக்க வேணும் அதைக் கேட்டு
ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம் ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்
முல்லைப் பூவு தென்றலிலே இதழ் விரிக்கும் மேக மின்னலிலே தாழம்பூவு மடல் விரிக்கும் முல்லைப் பூவு தென்றலிலே இதழ் விரிக்கும் மேக மின்னலிலே தாழம்பூவு மடல் விரிக்கும்
என் துரையே உன்னைக் கண்டால் மனம் சிரிக்கும் என் துரையே உன்னைக் கண்டால் மனம் சிரிக்கும் உள்ளே ஏடெடுத்து எழுதாத கவிப் பிறக்கும்
ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம் ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்
தந்தானே தானே தானே தந்தானே தந்தானே தானே தானே தந்தானே தானே தானே தந்தானே தானே தானே தந்தானே