Aadalama Nadam Aadalama

Aadalama Nadam Aadalama Song Lyrics In English


அன்பும் அமைதியும் நிறைந்தவளே அடியாள் மனக் கோயில் அமர்ந்தவளே அச்சம் மடம் நாணம் பயிற்பென்ற குணங்கள் அத்தனையும் மறந்து அம்பலத்திலே

ஆடலாமா நடம் ஆடலாமா ஆடலாமா நடம் ஆடலாமா தில்லை ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா ஆடலாமா நடம் ஆடலாமாஹா

தேடலாமா இன்னும் தேடலாமா தேடலாமா இன்னும் தேடலாமா தேசுலாவும் சுந்தரி தேவியே நிரந்தரி

மாசில்லா மகேஸ்வரி மௌனமேன் மனோஹரி மாசில்லா மகேஸ்வரி மௌனமேன் மனோஹரி திருவோடு ஏந்தும் பரதேசியான ஞானியோடு தியானம் மேவும் நிலையுடன் நடம் ஆடலாமா

நாடலாமா ஆஅ வற்றாத நதியுடன் வளராத மதியுடன் நடமாடும் நட சேகரா வனமாலை தங்கையை இடபாகம் ஏந்தியே வாழ்ந்திடும் சிவசங்கரா


நாடலாமா மனம் நாடலாமா மலை நீலியுடன் சேர்ந்து ஆடலாமா நாடலாமா மனம் நாடலாமா மலை நீலியுடன் சேர்ந்து ஆடலாமா ஆடலாமா நீ ஆடலாமா ஆடலாமா நீ ஆடலாமா

கண்ணிருந்தும் ஞாயமா நெற்றிக் கண்ணிருந்தும் ஞாயமா அதனால் கவலையெல்லாம் தீருமா ஆஅகண்ணிருந்தும் ஞாயமா அதனால் கவலையெல்லாம் தீருமா

பெண்ணைக் கண்ட மோகமா பித்துக் கொண்ட வேகமா பெண்ணைக் கண்ட மோகமா பித்துக் கொண்ட வேகமா கலை ஞான மேவும் ஒளியான காலகாலனே உனது காலும் நோகும் நிலையுடன் ஆடலாமா நீ ஆடலாமா ஆடலாமா நீ ஆடலாமா