Aambal Poovai Saambal Seithaai |
---|
பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்
பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய் அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்
பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய் அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்
பெண் : அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்
பெண் : எரியும் தீயை உறையும் என்றாய் ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்
பெண் : ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்
பெண் : கற்பு கடவுள் ரெண்டும் ஒன்று காட்சி சாட்சி உண்டா சொல்லு
பெண் : உண்டா சொல்லு
பெண் : ஆண்கள் செய்த ஆதிக்கம் பெண்கள் வாழ்வை சோதிக்கும் ராமன் செய்த தீக்குழி பெண்ணை இன்னும் பாதிக்கும்
பெண்ணை இன்னும் பாதிக்கும்
பெண் : ஆற்றின் வெள்ளம் ஆண்கள் உள்ளம் அலையும் நீர்போல் சலனம் கொள்ளும் அலையும் நீரும் அலையும் போதும் ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்
ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்
பெண் : தேகம் என்ற கோயிலில் காதல் என்ற தீபத்தை மானம் என்ற கைகளால் நாளும் நாளும் காக்கிறேன்
பெண் : கற்பு என்றும் உடலில் இல்லை கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை கற்பு என்றும் உடலில் இல்லை கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை
பெண் : அசையா மனமே கற்பின் திண்மை அடியாள் அசையாள் அதுவே உண்மை அதுவே உண்மை அதுவே உண்மை அதுவே உண்மை
பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய் அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்
பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய் அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்