Aathoram Manal Eduthu Sad |
---|
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்
குடியிருந்த மணல் வீடு மழையினிலே கரைந்ததம்மா கொண்டு வந்த ஆசை எல்லாம் வந்த வழி சென்றதம்மா அவள் இருந்த மனதினிலே இருள் இருந்து வாட்டுதம்மா
சங்கத்திலே தமிழ் வாங்கி தங்கத்திலே எழுதி வைத்தேன் கங்கையிலே படகு விட்டு காதலிலே மிதந்து வந்தேன் பாதியிலே பிரித்து விட்டு படகு மட்டும் சென்றதம்மா
இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்
பத்து விரல் மோதிரமாம் பவழ மணி மாலைகளாம் எத்தனையோ கனவுகளாம் எவ்வளவோ ஆசைகளாம் அத்தனையும் மறைந்ததம்மா ஆசை நிலா எரிந்ததம்மா
கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம் ஊர் முழுதும் திருநாளாம் உலகமெங்கும் மணநாளாம் உலகத்திலே நான்கு கண்கள் உறங்காமல் விழிக்குதம்மா
இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்