Annan Manam Pole Arumai

Annan Manam Pole Arumai Song Lyrics In English


அண்ணன் மனம் போலே அண்ணன் மனம் போலே அருமை குணம் போலே அமையாது அமையாது அவனி மேலே

அண்ணன் மனம் போலே அருமை குணம் போலே அமையாது அமையாது அவனி மேலே அண்ணன் மனம் போலே

பெற்ற பாசம் பொல்லாது பாராயோ பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ ஹோ ஓஓ பெற்ற பாசம் பொல்லாது பாராயோ பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ உற்ற பாசமொன்றே ரத்த பாசமோன்றே என்றும் ஈருடலில் ஒரு திரம் போல் அன்பின் சோதரனைப் போல் இனிமேலும் அமையாது அவனி மேலே

அண்ணன் மனம் போலே

எங்கள் காந்தி மகாத்மா தாயன்றோ காலன் பூசாரிக்கே பலி நீயன்றோ ரத்த வெள்ளத்திலே மூடப் பள்ளத்திலே மிதக்கும் மண்ணுயிரும் தன்னுயிராக எண்ணும் அண்ணனைப் போலே இனிமேலும் அமையாது அவனி மேலே


அண்ணன் மனம் போலே

காலை நேரம் வந்தாலே கூவிடுவாய் உந்தன் கடமை என்றே நீ தாவிடுவாய் கடிகாரமின்றி விடி நேரமென்றே சொல்லும் வாயில்லாத ஜீவராசியை அணைக்கும் அண்ணனைப் போலே இனிமேலும் அமையாது அவனி மேலே

அண்ணன் மனம் போலே