அரும்பரும்பா சரம் பாடல் வரிகள்

Starring Vignesh, Padmashri
Movie Chinna Thayee
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersP. Susheela
Year 1992

Arumbarumba Saram Song Lyrics In English

அரும்பரும்பா சரம் தொடுத்த
அழகு மலர் மாலை இது ஆராரோ
தரையினிலே தவழ்ந்து வந்த
தங்க நிலா மேனியிது ஆராரோ

மகளே நீ மயங்காதே
மணி விழியே கலங்காதே
பூச்சூடும் மணி பூந்தேரே
கூத்தாடும் பசும் பாலாறே

அரும்பரும்பா சரம் தொடுத்த
அழகு மலர் மாலை இது ஆராரோ
தரையினிலே தவழ்ந்து வந்த
தங்க நிலா மேனியிது ஆராரோ

ஒருவன் இசையினிலே
விரித்த வலையினிலே
இரையாக நான் விழுந்தேனே
மனிதன் குணங்களையும்
மாறும் நிறங்களையும்
அறியாமல் நான் இருந்தேனே

நஞ்சை விட கொடிது
ஆடவனின் மனது
அன்னை இதை அறிந்தால்
அல்லல் பட்ட பிறகு

ஏமாந்தால் தாயும்
என்னை போல நீயும்
ஆசை வைக்காதே
பின்பு அவதி படாதே


அரும்பரும்பா சரம் தொடுத்த
அழகு மலர் மாலை இது ஆராரோ
தரையினிலே தவழ்ந்து வந்த
தங்க நிலா மேனியிது ஆராரோ

புதிய தலைமுறையே
வளரும் இளம் பிறையே
தேயாமல் வாழ்ந்திடு நீயே
இளமை தலை விரிக்க
எனையே விலை கொடுத்து
மடி மீது வாங்கிய சேயே

உன்னை விட எனக்கு
சொத்து சுகம் எதற்கு
இந்த உயிர் உடலில்
உன்னை நம்பி இருக்கு

நாம் காண கூடும்
இள வேனில் காலம்
மார்பினில் ஆடும் சிறு
மாதுளம் பூவே

அரும்பரும்பா சரம் தொடுத்த
அழகு மலர் மாலை இது ஆராரோ

மகளே நீ மயங்காதே
மணி விழியே கலங்காதே
பூச்சூடும் மணி பூந்தேரே
கூத்தாடும் பசும் பாலாறே

அரும்பரும்பா சரம் தொடுத்த
அழகு மலர் மாலை இது ஆராரோ

Arumbarumba Saram Song Lyrics from movie Chinna Thayee. Arumbarumba Saram song sung by P. Susheela. Arumbarumba Saram Song Composed by Ilaiyaraaja. Arumbarumba Saram Song Lyrics was Penned by Vaali. Chinna Thayee movie cast Vignesh, Padmashri in the lead role actor and actress. Chinna Thayee movie released on 1992