En Manadhai Thirudi |
---|
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் என் மனதை திருடி
ஆஎன் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே
கள்ளியா இல்லை வள்ளியா இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா ஆழியா கடல் சோழியா எந்தன் தனிமை தேடி வந்த தோழியா
என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளேஏஏஏ ஆஆஆஆஆஆஆஆ
காதல் என்றும் ஒரு எரிமலை சிகரம் சிகரத்தில் இதயங்கள் கொடி கட்டிப் பறக்கும் அதிசயம் அது தொடத் தொடக் குளிரும் குளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே காதல் வெப்பம் தணியாது
ஓபதினெட்டு வயதான அவளொரு குழந்தை பறித்தாளே அழகாக என்னுடைய மனதை என் வானிலே அவள் வந்ததும் காதல் நிலா ஒளியானதே
உன் மனதை தந்தால் என்ன அடி என்னுயிரில் கலந்தால் என்ன
என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளேஏஏஏ ஆஆஆஆஆஆஆஆ
கண்ணிமையோ புது காதல் வேதம் படிக்கும் வேதங்கள் காதல் முன் கட்டுப்பட்டு கிடக்கும் உள்ளத்திலே ஒரு மௌன யுத்தம் நடக்கும் யுத்தங்கள் முடிந்தங்கே முத்தங்கள் பிறக்கும்
ஓஓஎரிந்தாலும் அவள் கையில் கற்பூரமாய் எரிவேன் விழுந்தாலும் அவள் நெஞ்சில் நங்கூரமாய் விழுவேன்
காதல் எனும் தேசத்திலே களவு எல்லாம் குற்றமில்லை இன்று முதல் குற்றம் செய்வோம் நாம் ஆயுள் வரை காதல் செய்வோம்
என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே கள்ளியா இல்லை வள்ளியா இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா ஆழியா கடல் சோழியா எந்தன் தனிமை தேடி வந்த தோழியா
என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளேஏஏஏ