Ennai Aalum Pennilave |
---|
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் பிரியங்கா என் கே
இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்
என்னை ஆளும் பெண்ணிலவே உனது வானம் நானே உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வா வா
இரவை நனைக்கும் பனியே பகலைத் திறக்கும் கதிரே
விழியை தாண்டும் அழுகைப் போதும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா
அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேட அன்பின் காட்டில் காதல் ஊற்றில் நாளும் மூழ்கி போக உணர்வில் கலந்தாய் உயிரே உனை நான் பிரியேன் இனியே
அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல உன்னை ஏந்தி கொள்ள எங்கும் காதல் உனக்கென நானும் எனக்கென நீயும் பிறந்த பிறகு பிரிதல் என்பதுஏது
இரவை நனைக்கும் பனியே பகலைத் திறக்கும் கதிரே விழியின் ஈரம் தொலைந்து போகும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா
அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேடி உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வாழ உணர்வில் கலந்தாய் உயிரே உனை நான் பிரியேன் இனியே
விழியை தாண்டும் அழுகைப் போதும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா