Its Raining Love |
---|
பாடகர் : மெர்வின் சாலமன்
வந்தாய் ஒரு நொடியில் விழியிலே தந்தாய் ஒரு புயலே உயிரிலே கொட்டும் மழைத்துளியின் நடுவிலே கொல்லும் உனதழகில் உருகினேன்
கலவரம் தந்தாய் பெண்ணே ஒரு பார்வையில் உயிர்வரை தின்றாய் என்னை ஒரு வேளையில் தரையினில் தத்தித் தாவும் ஒரு வானவில்
தகவலே இல்லை ஆனால் அருகே புயல் கொல்லாதே கொல்லாதே உன் கண்கள் கத்திப் பூக்கள் துள்ளாதே துள்ளாதே அடி பாவம் இங்கே ஆண்கள் தன்னாலே தன்னாலே என் நெஞ்சில் ஏதோ கூச்சல் உன்னாலே உன்னாலே
புரியாமலே உனை பார்க்கிறேன் நிஜமா இது எனை கேட்கிறேன்
வந்தாய் ஒரு நொடியில் விழியிலே தந்தாய் ஒரு புயலே உயிரிலே கொட்டும் மழைத்துளியின் நடுவிலே கொல்லும் உனதழகில் உருகினேன்
புரியாமலே உனை பார்க்கிறேன் நிஜமா இது எனை கேட்கிறேன்