Jilu Jilukkum Pachaimalai |
---|
ஜிலு ஜிலுக்கும் பச்சைமலை தென்றல் பொறந்தமலை தென் பொதிகை எங்கள் மலை சாமியோ சாமி
தேக்கு மரம் பாக்கு மரம் எங்கும் தென்னை மரம் புன்னை மரம்-எங்க வாழ்க்கை யெல்லாம் காட்டுக்குள்ளே ஏஞ்சாமியோ சாமி நாங்க வந்ததில்லே நாட்டுக்குள்ளே
இருவர் : சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ சித்திரைப் பதுமை தானுங்க பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ சித்திரைப் பதுமை தானுங்க பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க
தையன்னத் தையன்னத்தானா தையான தயன்னத்தான தங்தோம் தன்னானக் கந்தையா உன் பேரைப் பாடி வந்தோம் சிங்காரக் கந்தையா
வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா
மீறி வரும் புலியை வீரத்தினால் அடக்கி ஏறி மிதிச்சுக்கிட்டு பல்லை எடுப்பா
தையத் தையத் தையத் தந்தின்னத் தம்தின்னத் தைய திக்கெல்லாம் சுத்தி வருவா
மச்சானைத்தேடி தென்றலைத் தூது விடுவா மச்சானைத்தேடி தென்றலைத் தூது விடுவா
தையன்னத் தையன்னத்தான் தையான தயன்னத் தானத் தந்தோம் தன்னானக் கந்தையா உன் பேரைப் பாடி வந்தோம் சிங்காரக் கந்தையா
மழைமேகம் போலக் கூந்தல் தனைக்காட்டி மயங்கியோட வச்சு மயில் பிடிப்பா!
மதுரக் கவிபோலக் கோவையிதழ் காட்டி வண்ணம் பாட வைச்சுக் குயில் பிடிப்பா
இருவர் : பூனைபிடிப்போம் அதில் புனு கெடுப்போம் பொல்லாத சிங்கத்தையும் அடைத்து வைப்போம்! ஆனை பிடிப்போம் அதில் தந்த மொடிப்போம் அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்! அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!
இருவர் : சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ சித்திரைப் பதுமை தானுங்க பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க
தையன்னத் தையன்னத்தான் தையான தயன்னத் தானத் தந்தோம் தன்னானக் கந்தையா உன் பேரைப் பாடி வந்தோம் சிங்காரக் கந்தையா
சிங்கினி சிங்கினி சிங்கினி திறமையுள்ளவன் எடுத்துக்கோ டங்கினி மங்கினி டங்கினி மங்கினி ரகசியத்தைப் புரிஞ்சுக்க!