Kanava Illai |
---|
பாடலாசிரியர் : புலமை பித்தன்
கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா காதல் என்றொரு தீபம் காற்றில் சாய்ந்தது பாவம் என் மேல் என்னடி கோபம் கண்ணே கண்மணியே
கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா
எந்தன் காதல் கோயில் இன்று வெந்தது இங்கே தீயில் துள்ளிடும் ஆசை மானே இங்கு கொள்ளியை வைத்தவன் நானே
மனதினில் உந்தன் நினைவுகளே கடலலை போலே அலைகிறதே இன்று ஏனோ நானும் வாழ்கிறேன்
கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா
கண்களில் கண்ணீர் ஓடும் துன்ப காவியம் நாளும் பாடும் உனக்கது எங்கே கேட்கும் இது ஊமையின் ராகம் ஆகும்
மலர்வனம் இங்கே எரிகிறதே வசந்தத்தில் இலைகள் உதிர்கிறதே இது ஞாயம் தானா கண்மணி
கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா காதல் என்றொரு தீபம் காற்றில் சாய்ந்தது பாவம் என் மேல் என்னடி கோபம் கண்ணே கண்மணியே
கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா