Kannai Kavarum Kalai |
---|
கண்ணைக் கவரும் கலை பரதக்கலை கண்ணைக் கவரும் கலை பரதக்கலை இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை
கண்ணைக் கவரும் கலை பரதக்கலை இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை
கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம் ம்ம் எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம் இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம் ஆஆஆஆஆஆ எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம் இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம் இந்த இரண்டுக்கும் வழி காட்டும் தாளம்
இரண்டுக்கும் வழி காட்டும் தாளம் மூன்றும் இணைத்து வகுத்து தொகுத்து அமைத்த பாரத முனிவர் அருமையுடன் நமக்களித்த
கண்ணைக் கவரும் கலை பரதக்கலை இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை
கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
அற்புதம் வீரம் அச்சம் கோபம் சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம் அற்புதம் வீரம் அச்சம் கோபம் சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம் கருணை என வரும் நவரசமே கருணை என வரும் நவரசமே நமதறிவினை இழுத்திடும் அதன் வசமே
கண்ணைக் கவரும் கலை பரதக்கலை இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை
கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
சிங்காரக் கண்ணா உன்னை எங்கே சென்று தேடுவது சிங்காரக் கண்ணா உன்னை எங்கே சென்று தேடுவது
செண்பகச் சோலையிலே என்னை வரச் சொன்ன சொல்லைஈஈஈ ஆஅஆஆஆஆஆ செண்பகச் சோலையிலே என்னை வரச் சொன்ன சொல்லை எதனால் மறந்தாயோ ஏங்கவுமே செய்தாயோ
சிங்காரக் கண்ணா உன்னை எங்கே சென்று தேடுவது சிங்காரக் கண்ணா உன்னை எங்கே சென்று தேடுவது
சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும் சுதந்திரக் கூட்டம் நாங்க ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும் சுதந்திரக் கூட்டம் நாங்க ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க
போட்டி பொறாமை கிடையாது எங்க ஆட்டத்துகேதான் ஈடேது போட்டி பொறாமை கிடையாது எங்க ஆட்டத்துகேதான் ஈடேது புகழ் பெறுவோம் தவறாது புகழ் பெறுவோம் தவறாது
சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும் சுதந்திரக் கூட்டம் நாங்க ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும் சுதந்திரக் கூட்டம் நாங்க ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க