Kanneerale Vidhiyin |
---|
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது
அன்னை உன் அழகை பார்க்கும் விழியை மூடினாள் உன்னை தூங்க வைக்கவில்லை அவள்தான் தூங்கினாள்
ஊஞ்சலை போலொரு கூண்டில் கிளியே தூங்கவோ உனையே எண்ணிடும் தந்தை தனியே ஏங்கவோ எத்தனை காலம் இப்படி போகும் கண்டதை யாரோ யாரோ
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது
ஊமை பாடும் இந்த ராகம் உலகம் கேட்குமா நாளை எங்களது வானில் வெளிச்சம் தோன்றுமா
கோயிலும் கல்லறை ஆனால் எதுதான் சன்னதி அலையும் நெஞ்சுக்கு கொஞ்சம் அழுதால் நிம்மதி யாரிடம் செல்ல யாரிடம் சொல்ல ஆறுதல் சொல்வார் யாரோ
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது