Kannukkul Deepam |
---|
ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா
பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
ஆண் : ரோஜாப்பூ கூட்டங்களே இளமை தவழும் அழகு பெண்ணோவியம் ராஜாத்தி கூந்தலிலே பூ மேகம் நீந்திடுமோ பெண் : செந்தாழம் பூவை முந்தானை மூட என் தேகம் சூடேறும் இளம் கண்ணோரம் தேனூறும்
ஆண் : காதல் அரங்கேறும் நேரங்களே இளமை விளையாடும் பருவங்களே பெண் : பூவை பூவாகுமே தேகம் நோகாமலே வாசம் வீசும் மலர்களே
ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா பெண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
பெண் : செந்தூரம் சிந்தாமலே இரவும் பகலும் இனிமை சுகம் தேடுவோம் பூவாடை பறந்திடுமோ என் தேகம் மறந்திடுமோ ஆண் : என் இதயம் விற்று உன் இதயம் வாங்கி உயிரோடு உயிர் சேரும் என்றும் எழுதாத கதை பேசும்
பெண் : தெய்வம் நினைத்தாலும் பிரியாமலே இன்று உன் நெஞ்சே சிறையாகுமே ஆண் : வண்ணப் பூமேடையில் இரண்டு கிளி சேருது காதல் பேசும் உயிர்களே
பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா ஆண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி