Missing Me |
---|
வா வந்தமர் காது கொடு நீ முரடன் என்பாய்
அது என் முதல் நிலை என்பேன் நான் பூக்கள் துறந்தவன் புழுதி தின்று வந்தவன் புலிகள் என்னை புசிப்பதில்லை
உங்கள் பெருஆழிவாய் நான் வருகிறேன் இங்கு நானே அரசன் தலை தட்டும் அசுரன்
உன் சுருக்குக் கயிறு என் நரம்புகளால் பிண்ணப்பட்டது ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ அதனால் என்ன
அறமே கொல்லும் அரக்கன் நான் உன் பாவங்கள் மறப்பேன் உன்னை அழித்து மறப்பேன் என் இமைகள் களவு போனது
என் இரவு அழுகையை அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது என் சோகம் சவக்குழி இரண்டும் தின்று உயிர்ப்பித்தேன் எனை நான் என் ஆயுதம் தாங்க துடித்த உன் சதைக் கற்றை நலமா ?
There was once a beast inside me But he lives here no more I am him, he is me We are one now I see a animal lurking in my shadows
Don’t ask me why I am him, he is me We are one now!
எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா சிரித்திரு என்றும் என்பாள் அம்மா உண்மை
எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன் அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில் கொன்றவர் கணக்கு நினைவில்லை மன்னித்தருளும் மனமில்லை
ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன் அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள் என் கண்கள் போனது அய்யோ நான் வீசிய வாளால் யார் யார் செத்தார்களோ அய்யோ ஹா ஹா
இழந்தது மாயும் கண்கள் கிடைத்தது காரணங்கள்
என்னை குற்றம் சொல்லாதே என் வாளில் மோதி, அதைக் காயமுற செய்தவர்களை தண்டிப்பாயாக !!
தண்டிப்பாயாக யாருமில்லையா அய்யோ இப்போது யாரு அரக்கன்?? இப்போது யாரு அரக்கன்?
There was once a beast inside me But he lives here no more I am him, he is me We are one now
I see a animal lurking in my shadows don’t ask me why I am him, he is me We are one now
வருகிறேன் என் தேர்க்காலில் உன் உயிருடன் என் தோட்டாவில் உன் பெயருடன்
உன் விதி என் சதி என் கணம் உன் ரணம் ஒன்று இரண்டு மூன் நான்கு நிசப்தம்