Naalai Oru Poo Malarum

Naalai Oru Poo Malarum Song Lyrics In English


சில்வி ஷரோன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

நாளை ஒரு பூ மலரும் நாலு திசை வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்யா லஹரிதரும்

நாளை ஒரு பூ மலரும் நாலு திசை வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்யா லஹரிதரும்

தாவரங்கள் கை தட்டும் தாய் செடிக்கு கொண்டாட்டம் விண்மீன் போன்றதொரு மண்மீன் நான் என்று வான் வெளியை பார்த்து வண்ணமலர் கண்ணடிக்கும்

அழியும் பொருளோடு அழியாத பேரழகு சேர்ந்தவிதம் எங்கனமோ ஹோ ஓ தெய்வங்கள் உரையாடும் தெய்வங்கள் உரையாடும்

பூ பூ பூவாகி பூ பூ பூவாகி பூவாய் நாமாகி

ஹோ ஓ ஹா நாளை ஒரு பூ மலரும் பூ மலரும் நாலு திசை வாசம் வரும் வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்யலஹரிதரும்

சாயம் போன வாழ்வோடு சட்டென்று நிறமூட்டும் காற்றிணைத்து வைத்து காயவைத்து மணமூட்டும்

வாரிவந்து பசியாற வாவென்று தேனூட்டும் உண்டாடிய களைப்பாற உல் வீட்டில் மஞ்சமிதும்


குலமகளின் குழல் சேர்ந்தால் குலம் வளர்க்கும் பொருளாகும் பூ கூடை சேர்ந்தாளோ பூக்காரி உணவாகும்

பூ பூ பூவாகி பூ பூ பூவாகி பூவாய் நாமாகி

சந்நிதி சேர்ந்தாளோ சாமிக்கு வரமாகும் சருகாய் போனாலும் பூமிக்கு உரமாகும்

மனங்கொள்ளும் மேடையிலே மங்களத்தின் மணமாகும் படமாகும் வேளையிலோ படைக்கின்ற சரமாகும்

சின்னஞ்சிறு பூவோடு என்னென்ன பெருவாழ்வு நூற்றாண்டு வாழ்வோடு நமக்குண்ட பூ வாழ்வு

பூ பூ பூவாகி பூ பூ பூவாகி பூவாய் நாமாகி

நாளை ஒரு பூ மலரும் நாலு திசை வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்ய லஹரிதரும்