நான் ஏரிக்கரை மேலிருந்து பாடல் வரிகள்

Starring Vignesh, Padmashri
Movie Chinna Thayee
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersSwarnalatha, K. J. Yesudas
Year 1992

Naan Erikkarai Melirunthu Song Lyrics In English

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி ஒத்தையில
வாடுறேனே இக்கரையில

நான் மாமரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல

நான் மாமரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக‌ போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி திண்டாடி நிக்கிறேனே
இக்கரையில

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு தோணல

தூரக் கிழக்கு
கரை ஓரம் தான் தாழப்
பறந்து வரும் மேகம் தான்

உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும்
சேர ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல


மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்

மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ

கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப்
பெண்ணாய் மாறாதோ
மையேந்தும் கண்ணை
காட்டி மையல் தீர பேசாதோ

உன்னாலே தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக‌ போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி திண்டாடி நிக்கிறேனே
இக்கரையில

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல

Naan Erikkarai Melirunthu Song Lyrics from movie Chinna Thayee. Naan Erikkarai Melirunthu song sung by Swarnalatha, K. J. Yesudas. Naan Erikkarai Melirunthu Song Composed by Ilaiyaraaja. Naan Erikkarai Melirunthu Song Lyrics was Penned by Vaali. Chinna Thayee movie cast Vignesh, Padmashri in the lead role actor and actress. Chinna Thayee movie released on 1992