Nenjathil Irupathu Enna

Nenjathil Irupathu Enna Song Lyrics In English


நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன

மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன

கொத்தோடு துடிப்பது என்ன என்ன நிலைக் கொள்ளாமல் தவிப்பது என்ன என்ன

அத்தான் என்றழைப்பது என்ன என்ன மனம் அந்நேரம் கொதிப்பது என்ன என்ன

எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன

கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன

ஆஹா ஆ ஹோ ஓ ஓ இருவர் :

நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன




தொல்லைக் கொள்ளாமல் சுகம் எல்லையில்லாமல் வா வா வா வாவென்று சொல்லும் சொல்லென்ன

ஆசைக் கொண்டாட சிறு அச்சம் உண்டாக நீ போ போ போ என்று மாறும் குணமென்ன

ஆஹா ஆ ஹோ ஓ ஓ இருவர் :

நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன

மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன

இருவர் :