Oh Oh Oh Kaalai Kuyilgal |
---|
ஓஹ்ஹோ ஹோ நான நான னா நனன நானனா நானா நான்ன நானா நானா நான்ன நானா நன நனன்னா நன நனன்னா நன நன நனன்னா
ஓஹோஹோ காலைக் குயில்களே கவிதை பாடுதே கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும் பனித் துளியில் மலர்க் கொடிகள் குளிக்கிற பொழுதல்லவா பசும் கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா
பெண் மற்றும் ஓஹோஹோ காலைக் குயில்களே கவிதை பாடுதே
எழில் கொஞ்சும் பூவில் மலைத் தென்றல் வந்து முகம் துடைத்தே முத்து முத்தத்தை தருவது ஏனடியோ அதைக் காணும் வேளை இளம் கன்னிப் பாவை மனதினிலே புது உணர்ச்சி மலர்வதும் ஏனடியோ
இது என்ன மாயம் இது என்ன ஜாலம் இது என்ன மாயம் இது என்ன ஜாலம் காதலா ஆசையா காரணத்தை நீயும் சொல்லடி
ஓஹோஹோ காலைக் குயில்களே கவிதை பாடுதே கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும் பனித் துளியில் மலர்க் கொடிகள் குளிக்கிற பொழுதல்லவா பசும் கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா
பெண் மற்றும் ஓஹோஹோ காலைக் குயில்களே கவிதை பாடுதே
மலைச் சாரல் காற்று உடையோடு சேர்த்து மலருடலை தழுவையிலே மணி விழி மயங்குதடி எனைத் தூண்டும் பாட்டோ சுகம் பொங்கும் ஊற்றோ என்ன என்னவோ உணர்வுகளை தொட்டுத் தொட்டு எழுப்புதடி
இதில் இந்த நேரம் இளம் நெஞ்சின் ஓரம் இதில் இந்த நேரம் இளம் நெஞ்சின் ஓரம் மின்னல் போல் நாணமே மேடை கட்டி ஆடுகின்றதே
பெண் மற்றும் ஓஹோஹோ காலைக் குயில்களே கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும் பனித் துளியில் மலர்க் கொடிகள் குளிக்கிற பொழுதல்லவா பசும் கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா
ஓஹோஹோ காலைக் குயில்களே கவிதை பாடுதே
பெண் மற்றும் ஓஹோஹோ நான நான னா நனன நானனா