Ooty Malai Roja Chediyil

Ooty Malai Roja Chediyil Song Lyrics In English


ஊட்டி மலை ரோஜாச் செடியில் உன் முகம் தோன்றாதா காற்று வந்து பாடும் இசையில் உன் குரலும் கேட்காதா

மழை மேகத் தூளிகள் எங்கும் அதில் மின்னல் சங்கிலி தொங்கும் அழகே நீ பக்கம் வந்தால் ஆகாயம் கீழிறங்கும் மடி மீது சாயும் போது சொர்க்கம்தான் தாள் திறக்கும்

சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரேம்ம்ம்ம் சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரேம்ம்ம்ம்

சின்ன சின்ன பார்வைகள் போதும் கண்கள் பேசும் வார்த்தைகள் போதும் இன்னுமென்ன வாழ்க்கையில் வேண்டும் சொல் சொல் சொல் சொல் சொல்

சைய்யாரே சைய்யாரே சைய்யாரே

தென்றல் போல நீ தொட வேண்டும் நானும் பூவாய் பூத்திட வேண்டும் வேறு என்ன வாழ்க்கையில் வேண்டும் சொல் சொல் சொல் சொல் சொல்

எந்தன் மனதை திருடிக் கொண்டு இல்லை என்று சொல்லாதே எந்தன் உயிரை திருடிக் கொண்டு என்னை விட்டு செல்லாதே

நீ கண்ணை மூடிக் கொண்டால் இருளாகும் என் உலகம் உன் காதல் இல்லையென்றால் இயங்காது என் இதயம்

சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யாரேம்ம்ம்ம் சைய்யாரே சைய்யாரே சைய்யாரே சைய்யாரே

என்னை எனக்கே ஞாபகம் இல்லை உன்னை மறந்த நேரமும் இல்லை என்ன என்றே புரியவும் இல்லை ஏன் ஏன் ஏன் ஏன்


சைய்யாரே சைய்யாரே சைய்யாரே

வானம் கீழே வந்தது போலே பூமி மேலே போனது போலே மாறி தோன்றும் காட்சிகள் இங்கு ஏன் ஏன் ஏன் ஏன்

உன்னை விட்டு போகச் சொன்னால் உயிரை விட்டு போகின்றேன் உன்னை எண்ணி தினமும் இங்கு காதல் தீயில் வேகின்றேன்

உடல் என்ன ரோஜாப் பூவின் இதழ் கொண்டு பின்னியதா மடி மீது சாயும் போது மழை மின்னல் மின்னியதா

சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரேம்ம்ம்ம்

ஊட்டி மலை ரோஜாச் செடியில் உன் முகம் தோன்றாதா காற்று வந்து பாடும் இசையில் உன் குரலும் கேட்காதா

மழை மேகத் தூளிகள் எங்கும் அதில் மின்னல் சங்கிலி தொங்கும் அழகே நீ பக்கம் வந்தால் ஆகாயம் கீழிறங்கும் மடி மீது சாயும் போது சொர்க்கம்தான் தாள் திறக்கும்

சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரேம்ம்ம்ம் சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரேம்ம்ம்ம்