Oru Maalai Chandiran

Oru Maalai Chandiran Song Lyrics In English


பால் நிலவு சூரியன் போல் சுட்டதென்ன நியாயம் பச்சக் கிளி தோளக் கொத்தி வந்ததிந்த காயம் ஓடி வந்த வைகை நதி காஞ்சதென்ன மாயம் கூட வழி இல்லை என்றே ஆனது பெண் பாவம்

ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே

குளிர் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆ

ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே

வெண்ணிலவில் தேடுகிறேன் கன்னி முகம் காணோம் புன்னகையும் நான் இழந்தேன் என் மனதில் சோகம் சித்திரத்தை பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன் தென் மலையை போல் இருந்தேன் தென்னிலங்கை ஆனேன்

செல்லக் குயில் கூவ மெல்ல வரும் மேகம் சொல்லில் வரும் சோகம் கங்கை நதி ஆகும் எங்கிருந்த போதிலும் நீ வந்து விடு தேவி

மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே

குளிர் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆ


ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே

நித்திரையில் பூவெடுத்தேன் நெஞ்சில் ஒரு காயம் காயம் கொண்ட போதினிலும் பூவில் எந்தன் மோகம் தெற்குக் கடல் ஆழத்திலே முத்தெடுக்கப் போனேன் மூச்சடங்கிப் போனதடி முத்தை இன்னும் காணேன்

உந்தன் முகம் தேடி உள்ளம் அலை பாயும் தென்றல் இன்றிப் போனால் தேகம் அனலாகும் எங்கிருந்த போதிலும் நீ வந்து விடு தேவி

மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே

குளிர் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆ

ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே