Pachai Vayal Pakkathile |
---|
ஓஓஹ்ஓஹ்ஹோஓஒ ஓஓஹ்ஓஹ்ஹோஓஒ
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி என்ன அவன் லீலையடி ரெங்கம்மா இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி என்ன அவன் லீலையடி ரெங்கம்மா இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ஆசையை நெஞ்சில் வச்சு தேவையை வாழ்வில் வச்சான் ரெண்டிலும் தொல்லைய வச்சான் ரெங்கம்மா இந்த ரெண்டுக்கும் எல்லை உண்டோ சொல்லம்மா ரெங்கம்மா ரெண்டுக்கும் எல்லை உண்டோ சொல்லம்மா
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி என்ன அவன் லீலையடி ரெங்கம்மா இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
அங்குமிங்கும் அலையும் மனிதனின் கண்கள் அளவில்லாமல் ஓடும் மனிதனின் கால்கள் அங்குமிங்கும் அலையும் மனிதனின் கண்கள் அளவில்லாமல் ஓடும் மனிதனின் கால்கள்
அவன் தேய்ந்து போன நிலவு ஆனால் பார்க்க மட்டும் அழகு அவன் தேய்ந்து போன நிலவு ஆனால் பார்க்க மட்டும் அழகு
தேரிருந்தும் தெய்வமில்லா பூமியடி ரெங்கம்மா தெய்வத்துக்கும் கண்ணில்லாத நேரமடி
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி என்ன அவன் லீலையடி ரெங்கம்மா இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
காய்ந்து போகும் வயல்கள் கோடை வந்தால் பாய்ந்து செல்லும் வெள்ளம் மழையும் வந்தால் காய்ந்து போகும் வயல்கள் கோடை வந்தால் பாய்ந்து செல்லும் வெள்ளம் மழையும் வந்தால்
இது காலதேவன் கடமை இந்த மனித வாழ்வு கொடுமை தாய்மடியில் வளர்ந்து வந்த பிள்ளையடி ரெங்கம்மா தாய்க்கு மட்டும் சோறு போட்டதில்லையடி
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி என்ன அவன் லீலையடி ரெங்கம்மா இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
வறுமை என்பதென்ன வயிற்றைக் கேளு பொறுமை என்பதென்ன மனதை கேளு வறுமை என்பதென்ன வயிற்றைக் கேளு பொறுமை என்பதென்ன மனதை கேளு
உணர்ந்து பார்க்கும்போது இந்த உலகம் யாவும் தெரியும் பசிக்கொரு நிறமுமில்லை எண்ணம் உண்டு அதைப் பார்ப்பதற்கு தேவையில்லை கண்ணிரண்டு
பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி என்ன அவன் லீலையடி ரெங்கம்மா இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா