Ponnattam Poovattam

Ponnattam Poovattam Song Lyrics In English


ஆண் பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு முன்னாலே நின்னாலே போதுமப்பா கன்னாலம் கட்டிக்க சம்மதிச்சா தன்னாலே ஆனந்தம் மோதுமப்பா நான் கொடுத்த மனச தான் கொடுக்கத் ஒருத்தி வேணும்

பெண் பொட்டோடு பூவோடு பொண்ணிருந்தா பின்னால ஆண் பிள்ள கூட்டம் வரும் கன்னாலம் கட்டிகத் தோதாகத்தான் மாப்பிள்ள வாய்ச்சாக்கா ஆட்டம் வரும் ஆச வெச்சா அதுக்கு பூச வெக்க ஒருத்தன் வேணும்

மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு பாடு பட்டு ஒழச்சேன் ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான் தான்

மச்சான் உன் கண்ணாலே மெட்டு கட்டு பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு பாடு பட்டு ஒழச்சேன் ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான்தான்

பெண் பொன் விளையும் பூமி இது நாம் கும்பிடுற சாமி இது மண்ண நம்பி வாழ்ந்திருப்போம் நாம் தினம் பொன்னை அள்ளிச் சேர்த்திருப்போம்

ஆண் நல்ல வரம் வாய்ச்சிருந்தா நாம நட்டதெல்லாம் பூத்து வரும் சொன்ன படி வாசலுக்கு நாம் தொட தென் பொதிகை காத்து வரும்

கண்ணோடு உண்டான ஆசைகளும் பெண் நெஞ்சோடு உண்டான ஓசைகளும் கைக் கூடும் அம்மாடி காத்திருந்தா ஆண் கண் மூடித் தூங்காமல் பாத்திருந்தா

பெண் மண் வாசம் பெண் வாசம் பூத்தாதானே உண்டாகும்

மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு


ஊட்டி மலைச் சாரலிலே விழும் ஊசி மழைத் தூரலிலே பாட்டெடுக்கத் தோணுதடி பெண் மனம் பம்பரமா ஆடுதடி

பெண் வளர்க்கும் கூந்தலிடம் மேகம் போட்டி இடப் பார்க்குதடி போட்டி இட்டு தோற்று விட்டு வான் வழி ஓடி விடும் பாருங்கடி

பெண் பொல்லாத வர்ணிப்பு தேவை இல்லே வர்ணிப்பில் ஏமாறும் பாவை இல்லே ஆண் உண்மைக்கு எப்போதும் காலம் இல்லே பொய் சொல்ல இங்கே தான் கவிஞன் இல்லே

பெண் ஆண் என்ன பெண் என்ன எல்லாம் இங்கே பாட்டாளி

மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு

பாடு பட்டு ஒழச்சேன் ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான்தான்

தன்னான தன்னான தன்னானன்னா தன்னான தன்னான தானானன்னா தன்னான தன்னான தன்னானன்னா தன்னான தன்னான தானானன்னா