Purave Yaen Kannadicha 2

Purave Yaen Kannadicha 2 Song Lyrics In English


அழகான வானவில் சாலை அதில் நடக்க வழிகள் இல்லை கண்ணடித்து அழைக்கும் விண்மீன்கள் அதை பிடிக்க வலைகள் இல்லை

பஞ்சு மெத்தை போல் அந்த மேகம் அதில் உறங்க வழிகள் இல்லை நீ ரசிக்கத்தான் அந்த நிலவு அதில் வசிக்க வசதி இல்லை

புறாவே ஏன் கண்ணடிச்சே என் மனச ஏன் மந்திரிச்சே விநோதமா ஏன் சிரிச்சே என் உயிரை ஏன் கத்திரிச்சே

என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே போர்வையாக என்ன மடிக்கிறே அத்துமீறியே மனசில் நுழையுறே சுரங்க பாதையில நடக்குறே

புறாவே ஏன் கண்ணடிச்சே என் மனச ஏன் மந்திரிச்சே

அடி மில்லி மில்லியா கிள்ளி என்னை திருடி போகிறாய் கள்ளி நீ முருகன் முருகன் என சொல்லி என்னை ஆண்டியாக்கும் வள்ளி

எனை அன்பில் மிரட்டி தினம் ஆளும் நீ சர்வாதிக்கார மன்னன் நீ ராதை ராதை எனச் சொல்லி எனை வெண்ணையாக்கும் கண்ணன்

அன்பே நீ நாணம் கொண்டாய் நானொரு ஓவியன் ஆனேன் அன்பே நீ காதலன் ஆனாய் நான் தேவதை ஆகி விட்டேன்

அடி கண்ணை மூடினால் இமையில் தெரிகிற எப்படி தூங்குறது சொல்லும்மா குளிக்க போகையில் கூட வருகிற எப்படி குளிப்பது சொல்லய்யா


புறாவே ஏன் கண்ணடிச்சே என் மனச ஏன் மந்திரிச்சே என் தோளில் கடக்குற துண்ட பறிக்குறே போர்வையாக என்ன மடிக்கிறே அத்துமீறியே என் மனசில் நுழையுறே சுரங்க பாதையில் நடக்குறே

ஒரு பலூன் போல என் மனசு அட பறந்து போகுது பாரு அதனுள்ளே இருக்குற காத்து அது நீ கொடுத்த மூச்சு

ஒரு பூவைப் போல என் உயிரு இப்ப பூத்து குலுங்குது பாரு அதனுள்ளே இருக்கிற வாசம் அது நீ கொடுத்த நேசம்

இப்போது இரவா பகலா இதென்ன வெய்யிலா மழையா ஒன்றேதான் எல்லாம் இங்கே ஒன்றாய் நாமிருந்தால்

பூமி நழுவுது வானம் நழுவுது வேற்று கிரகம் நம்மை அழைக்குது சிறந்த காதலர் என்று நமக்குத்தான் காதல் வாழ்த்து தன்னை அனுப்புது

புறாவே ஏன் கண்ணடிச்சே என் மனச ஏன் மந்திரிச்சே விநோதமா ஏன் சிரிச்சே என் உயிரை ஏன் கத்திரிச்சே

என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே போர்வையாக என்ன மடிக்கிறே அத்துமீறியே மனசில் நுழையுறே சுரங்க பாதையில் நடக்குறே