Sollattuma Kanna Sethithan |
---|
சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா வா வா இவள் உனக்கொரு ராதா
சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான்
பூவிழி எழுதும் கோலம் காவியம் உதயமாகும் தேவியின் இளைய தேகம் தேவனின் நினைவில் வாடும்
என்னமோ ஏக்கம் வந்து போகும் கண்ணிலோ காதல் மயக்கம் என்னமோ ஏக்கம் வந்து போகும் கண்ணிலோ காதல் மயக்கம்
எனைத் தாலாட்டு தோளில் போட்டு இமை நான் மூட துடிக்கிறேன் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா
சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா
வாலிபம் புதிய ராகம் வாழ்வது உனது யோகம் ஆசையின் உதய கீதம் ஆயிரம் இனிமை கூறும்
உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன் எண்ணித்தான் நானும் தவிப்பேன் உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன் எண்ணித்தான் நானும் தவிப்பேன்
இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு உனைத்தான் கேட்டுப் பிறக்குதே வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா
சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா வா வா இவள் உனக்கொரு ராதா