Thalaattu – Naatpadu Theral

Thalaattu – Naatpadu Theral Song Lyrics In English


ஆராரோ ஆரிரோ ஆண் அழகே ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆண் அழகே ஆரிரோ

ஆராரோ ஆரிரோ ஆண் அழகே ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆண் அழகே ஆரிரோ

வண்ணவண்ணக் கோமளமே! வலதுகை மாம்பழமே! இனம்பெருத்த வம்சத்தில் சனம்பெருத்த குடும்பத்தில் ஆறாம் திருமகனாய் ஆளவந்த சோழமன்னா

ஆராரோ ஆரிரோ ஆண் அழகே ஆரிரோ

புள்ளிமான் கோம்பையில புலிவந்து போகுதின்னு பொன்வேல் கைவாங்கிப் புலியெறிய வந்தவனே!

சித்தெறும்பு கடிச்சாலும் சித்தப்பா வருவாக தாங்கித் தோள்மாத்தத் தாய்மாமன் வருவாக

ஆராரோ ஆரிரோ ஆண் அழகே ஆரிரோ

தாத்தாமார் தூக்கிவச்சாத் தாடிமுடி குத்துமின்னு அள்ளி அள்ளி மார்பணைக்க ஐத்தமார் வருவாக

பாட்டுப் பலபடிச்சுப் பால்சோறு ஊட்டிவிடும் கூட்டுக் குடும்பமடா குலவிளக்கே கண்ணுறங்கு குலவிளக்கே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரோ ஆண் அழகே ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆண் அழகே ஆரிரோ

சின்னஞ்சிறு பிறையே சிவப்புக்கல் ரத்தினமே! எண்ணக் களஞ்சியமே ஏலம்பூ வாசகமே!


அப்பன் வெளியூரு ஆத்தா தனியாளு கூட்டுக் குடும்பம் இப்போ குடைசாஞ்சு போனதடா

தாய்மாமன் பொழப்புக்குத் தாராவி போயிட்டாக சித்தப்பா எல்லாரும் சீமையில இருக்காக

ஒம்போலச் செல்வந்தன் ஒலகத்தில் கண்டதில்ல எம்போல ஏழையைநீ எங்காச்சும் கண்டதுண்டா

எச்சிப்பால் தீந்ததடா இருந்தவரை ஊட்டிவிட்டேன் மிச்சப்பால் ஊறும்வரை மின்மினியே கண்ணுறங்கு மின்மினியே கண்ணுறங்கு

மாணிக்க மாமணியே! மார்க்கண்டன் புத்திரனே! சோறூட்டச் சொந்தமில்ல தொட்டிலிட பந்தமில்ல நாதியத்த குடும்பத்தில் நாயகமா வந்தவனே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆத்தா ஒரு மூலையில அப்பன் ஒரு மூலையில காத்தாப் பறக்குறாக கவர்மெண்ட்டு வேலையில

வீடியோ பார்த்தபடி வேலைக்காரி தூளியாட்ட ஆடியோ கேட்டபடி ஆதவனே கண்ணுறங்கு

ஒத்தையில பொறந்தவனே உனக்காரும் துணையில்ல வித்தையெல்லாம் கத்துக்கிட்டு வெளிநாடு போமகனே!

லண்டன் திருமகளோ லாஸ்ஏஞ்சல்ஸ் மருமகளோ பெத்ததாய் தகப்பனுக்குப் பத்திரிகை கொடுமகனே! பத்திரிகை கொடுமகனே! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்