Valarum Jeevanada |
---|
மலை போல துன்பங்கள் வந்தாலுமே உன் மனமது தளர்ந்திடாதே வருங்கால வீரராம் நிகழ்கால சிறுவர்கள் வாட நீ பார்த்திடாதே வாட நீ பார்த்திடாதே
வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா
தெருவில் நாதியில்லாமல் எலும்புந்தோலுமாய் தெருவில் நாதியில்லாமல் எலும்புந்தோலுமாய் சிறுவர்கள் கையேந்தியே திரிவதைப் பார்த்திடடா
வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா
விளையும் பயிர் செழித்திடவே வேலிக் கட்டிக் காத்திடவே களையை நீக்குவதைக் கடமையாக நீ கொள்ளடா உலகம் தழைத்திடவே உயர் நாடி இவர்களடா
வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா