Ellaiyillatha Inbathile |
---|
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்
பாடல் ஆசிரியர் : கு மா பாலசுப்ரமண்யம்
பெண் : எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்த நாளே எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்த நாளே
ஆண் : இமையும் விழியும் போலே நாம் இணைந்தோம் அன்பினாலே இமையும் விழியும் போலே நாம் இணைந்தோம் அன்பினாலே
பெண் : எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்த நாளே
மலரும் பூவெல்லாம் ஆவலினாலே மருவும் தேன் வண்டைத் தேடல் எதனாலே மலரும் பூவெல்லாம் ஆவலினாலே மருவும் தேன் வண்டைத் தேடல் எதனாலே
ஆண் : அழகின் ஓவியமே என்னாசை போலே அழகின் ஓவியமே என்னாசை போலே ஆருயிர் நாயகி நீ ஆனதாலே ஆருயிர் நாயகி நீ ஆனதாலே
எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்த நாளே இருவர் : இமையும் விழியும் போலே நாம் இணைந்தோம் அன்பினாலே
ஆடிடுவோம் அன்பினாலே ஆடிடுவோம் அன்பினாலே நாமே ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே ஆடிடுவோம் அன்பினாலே
ஆசையாய் நிலவின் ஜோதியினாலே ஆசையாய் நிலவின் ஜோதியினாலே அல்லியும் உன் போலே சிரிப்பதைப் பார்
நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை
இருவர் : ஆடிடுவோம் இருவர் அன்பினாலே நாமே ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே ஆடிடுவோம் அன்பினாலே