Azhuthu Azhuthu Sornthu |
---|
பாடல் ஆசிரியர் : எம்எஸ் பாலசுப்ரமண்யம்
அழுது அழுது சோர்ந்ததையோ பாப்பா அழ இயலாது கண்ணும் மூடினதோ பாப்பா தாழவே இயலாத கொடும் பசியாலே
வழியே இல்லையா வாழ வழியே இல்லையா இளம் சேயினின் கொடும் பசி தீர வழியே இல்லையா வாழ வழியே இல்லையா
பூணவே தங்கமும் நகை கேட்டாரா வாழ்ந்திட மாளிகை ஏதும் கேட்டாரா தீராப் பசிப்பிணி தீரக் கஞ்சியே போதுமென்றாலும் வழியே இல்லையா வாழ வழியே இல்லையா
கொடிய பசியினால் ஏங்கும் பிள்ளைக்கு கதைகள் சொல்லினும் நித்திரை போகுமா பாலுக்கு பதில் என் கண்ணீர் தந்தால் கொடும் பசி தீர்ந்திடுமா
வழியே இல்லையா வாழ வழியே இல்லையா இளம் சேயினின் கொடும் பசி தீர வழியே இல்லையா வாழ வழியே இல்லையா